பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது நீதிமன்ற வளாகத்தில் ஷூ வீச்சு!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபரான முஷாரப் கடந்த 4 ஆண்டுகாலமாக வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்தார். கடந்த 24-ந் தேதி துபையில் இருந்து கராச்சி வந்து சேர்ந்தார். .மே மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பங்கேற்பதற்காக தாம் நாடு திரும்பியிருப்பதாக தெரிவித்தார். அவர் நாடு திரும்பினால் கொலை செய்யப்படுவார் என்று தலிபான்கள் விடுத்த எச்சரிக்கையையும் மீறி பாகிஸ்தான் வந்து சேர்ந்தார்.
இந்நிலையில் அவர் மீதான வழக்கு ஒன்றில் சிந்து மாகாண நீதிமன்றம் கொடுத்திருந்த முன் ஜாமீனை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்காக இன்று முஷாரப் சிந்து மாகாண நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நீதிமன்றத்துக்கு வருகை தந்த முஷாரப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது மர்ம நபர் ஒருவர் முஷாரப்பை நோக்கி ஷூ ஒன்றை வீசி எறிந்தார். ஆனால் அந்த ஷூ அவர் மீது படவில்லை. இந்த களேபரத்துக்கு மத்தியில் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார் முஷாரப். அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட முன் ஜாமீன் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications