தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்!

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் எனும் தாமிர உருட்டு ஆலையில் இருந்து கடந்த 23-ந் தேதி வெளியேறிய நச்சு வாயுவால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர். இந்த நச்சுக் காற்றினால் பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள், மரங்களின் இலைகள் பூக்கள் நிறம் மாறி கருகி உதிர்ந்தன.
ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளேயே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆடையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு வைகோ, நல்லகண்ணு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கடந்த 28-ந் தேதி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் காற்று மற்றும் நீரை மாசுபடுத்தியதற்காக ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications