For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏப்ரல் 2ம் தேதி ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள் நடிகர்கள்

Google Oneindia Tamil News

Nadigar Sangam to observe fast on April 3 in support of Lankan Tamils
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 2ம்தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நடிகர் சங்கத்தின் தலைவரான சரத்குமாரும், பொதுச் செயலாளரான ராதாரவியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலையில் இலங்கையில் இனப்போரினால் பாதிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளான நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, சுதந்திரமான நல்வாழ்விற்காக 02.04.2013 அன்று செவ்வாய் கிழமை தி.நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு, திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அதில் இணைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம், சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், பி.ஆர்.ஓ.க்கள் சங்கம் ஆகிய அனைத்து சங்கங்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளனர்.

English summary
Nadigar Sangam has announced that it will observe a day long fast on April 3 in support of Lankan Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X