பெலாரஸில் நாய்க்கு அடித்த ரூ. 5 கோடி ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

மின்ஸ்க்: பெலாரஸ் நாட்டில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த நாய் ஒன்றுக்கு சுமார் ரூ. 5 கோடி கிடைத்துள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது பெலாரஸ். அந்த நாட்டில் உள்ள புடோச்கா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பியோடோரவ். அவர் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவில் குடியேறிவிட்டார். கடந்த 2007ம் ஆண்டு ஜான் தனது சொந்த கிராமத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள வாசிலி பொடபாவ் என்பவரின் நாய் ஜுலிக்கை(10 வயது) பார்த்தார். ஜுலிக் இறந்து போன தனது தாய் வாலெட்டை தனக்கு நினைவூட்டியதாக ஜான் தெரிவித்தார்.

1950களில் வாலெட் இறந்தது. நாயக்கு பெரும் தொகையை செலவு செய்து அறுவை சிகிச்சை செய்வதா அல்லது சாக்ரமென்டோவுக்கு டிக்கெட் எடுப்பதா என்ற நிலையில் இருந்தார் ஜான். அமெரிக்காவில் குடியேறுவது தான் முக்கியம் என்று டிக்கெட் எடுத்துவிட்டார். இதையடுத்து வாலெட் இறந்தது. இதனால் ஜானுக்கு ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் தான் ஜுலிக்கை பார்த்தார். இதையடுத்து அவர் ஜுலிக் பெயரில் பெலாரஸில் வங்கி கணக்கு ஒன்றை துவங்கி அதில் சுமார் ரூ.5 கோடி பணம் போட்டுள்ளார்.

ஜான் தனது உயிலில் எழுதி வைத்திருப்பதாவது,

ஜுலிக்கிற்கு என்று பெரிய அறை, படுக்கை, பிளாஸ்மா டிவி கிடைத்துள்ளது. அதற்கு 3 நேர உணவு, தினமும் வாக்கிங், இரண்டு முறை குளியல் ஆகிய வசதிகள் கிடைத்துள்ளன.

ஜுலிக் ஆண்டுக்கு ஒரு முறை உலகில் எந்த நாட்டுக்கும் சென்று வரலாம். அது உலக வரைபடத்தில் எங்கு தனது வாயை வைக்கிறதோ அந்த நாட்டுக்கு அதை அழைத்துச் செல்ல வேண்டும். அது பெரும்பாலும் ஜூலையில் பயணம் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜுலிக் உலக வரைபடத்தில் பாரிஸை தேர்வு செய்ய வேண்டும் என்று அதன் உரிமையாளர் வாசிலி விரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+