உ.பி யில் பள்ளி சென்ற 4 சகோதரிகள் மீது ஆசிட் வீச்சு; ஒருவர் கவலைக்கிடம்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் முசாப்பாநகரில் பைக்கில் சென்ற வாலிபர்கள் இரண்டு பேர் ஆசிரியைகள் மீது ஆசிட்டை வீசியுள்ளனர். இதில் சகோதரிகள் நான்கு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
சகோதரிகள் 4 பேரும் பள்ளியில் இருந்து நேற்று திரும்பி வந்துள்ளனர். அப்போது இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. காயம் அடைந்த சகோதரிகள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒருவரது நிலை மிகவும் மோசம் அடைந்தததை தொடர்ந்து அவர் புதுடெல்லி கங்காராம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எங்கள் மீது ஆசிட் வீசியவர்கள் முகத்தை துணியால் மூடியிருந்தனர்' என பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் போலீசில் தெரிவித்துள்ளார்.
ஆசிட் வீச்சிற்கான காரணம் என்ன? ஏதேனும் காதல் விவகாரமா என்பது குறித்து அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஆசிட் வீசிய வாலிபர் யார் என்று தெரியவரவில்லை.












Click it and Unblock the Notifications