கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 21 வங்காள தேச மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின
Subscribe to Oneindia Tamil
டாக்கா: கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 21 வங்காள தேச மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன.
கடலில் மீன் பிடிக்கச் சென்ற வங்காள தேச மீனவர்களை கடந்த மாதம் 25ம் தேதி கடற்கொள்ளையர்கள் வழி மறித்தனர். 3 படகுகளில் இருந்த 36 மீனவர்களை தாக்கி, அவர்களின் பொருட்களை பறித்துக்கொண்ட கொள்ளையர்கள், பின்னர், அவர்கள் அனைவரின் கை, கால்களை கட்டி கடலினுள் தூக்கிப் போட்டனர்.
காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள குத்தூப்தியா தீவில் நேற்று 21 மீனவர்கள் பிணமாக கரை ஒதுங்கியுள்ளன. இதர மீனவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications