எங்கள் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சிக்கு வர முடியாது.. அத்வானியின் 'உல்டா' பேச்சு

ஆனால், காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று வித்தியாசமாகப் பேசியுள்ளார் பாஜக தலைவர் அத்வானி. இதன்மூலம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இரு கட்சிகளுமே மத்தியில் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்பதையும், மூன்றாவது ஒரு அணி தான் ஆட்சிக்கு வரப் போகிறது, அதற்கு காங்கிரசோ அல்லது பாஜகவோ ஆதரவு தர வேண்டிய நிலை வரப் போகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் நகரில் மாநில பாஜக செயற்குழுவில் பங்கேற்க வந்த அத்வான நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த ஆண்டு கர்நாடகம், டெல்லி, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேதான் நேரடி போட்டி. இந்த தேர்தல்களில் பாஜக வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது.
இந்தத் தேர்தல்கள் முடிந்தவுடன், இந்த ஆண்டே நாடாளுமன்றத் தேர்தல் வரும். நாடாளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் நடந்தாலும் காங்கிரஸ் தோற்பது உறுதி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
கடந்த 3 ஆண்டுகளில் ஊழல்தான் முக்கிய பிரச்சனை ஆகிவிட்டது. எத்தனையோ ஊழல்கள் வெளிவந்து விட்டன. இந்த ஊழல்களால், சாதாரண மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த அரசில் இருந்து விடுபட விரும்புகின்றனர். விலைவாசி உயர்வும் முதுகெலும்பை முறித்து விட்டதால், மக்கள் மாற்றம் காண விரும்புகின்றனர். கறுப்பு பணத்தை மீட்கக்கோரி நான் யாத்திரை சென்றேன். ஆனால் ஒரு ரூபாய் கூட மீட்கப்படவில்லை.
ஆனால், வாஜ்பாய் அரசு எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தியது. இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றியது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை கொண்டு வந்தது. விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தது. ஊழலே இல்லாத நிலை இருந்தது என்றார் அத்வானி.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications