தமிழகத்தில் நாளை நடக்கும் கூட்டுறவுச் சங்க தேர்தலுக்கு தடை இல்லை: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேசமயம் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 25 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை தியாகராயர் நகர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம்.ஆறுமுகம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து பரமசிவம் உள்பட 2 பேர் சார்பாக வக்கீல் சி.பிரகாசம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக சங்க உறுப்பினர்கள் சிலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் சுரீந்தர் சிங் நிஜ்ஜார், பினாகி சந்திர கோஷ் அடங்கிய அமர்வு புதன்கிழமை பரிசீலித்தது.
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் அதிகாரம் சங்கத்தின் இயக்குநர்களுக்கு மட்டும் இருந்தது. அதை மாற்றி, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு பொதுக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.
"தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வழக்கறிஞர் நந்தகுமார் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி,கூட்டுறவு சங்க தேர்தல் கடந்த 11 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதனால் கூட்டுறவு சங்க பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சங்கங்கள் நலிவடைந்த நிலையில் உள்ளன. இவற்றுக்கு புத்துணர்ச்சி அளிக்க புதிய சட்ட திருத்தம் கொண்டுவந்து, அதன்படி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டும். தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தற்போது தடை விதிக்க கூடாது என்றார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், "தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. உங்கள் மனு தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்' என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications