பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ கவர்னர்
பெங்களூர்: நாட்டின் பணவீக்கத்துக்கு கிராமப்புற மக்களும் சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் காரணம் என்று கூறி பலத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற கர்நாடகா தொழில்-வர்த்தக சபை கூட்டத்தில் சுப்பாராவ் பேசுகையில்,2010, 2011 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. 2012-ம் ஆண்டு பண வீக்கம் மிதமாக இருந்தது. பணவீக்கம் அதிகரித்ததற்கு உணவுப்பொருட்கள் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதே காரணம்.உணவுப்பொருட்கள் விலைதான் ஒட்டுமொத்த பணவீக்கத்துக்கு வழிவகுக்கிறது. வருமான முறையில் ஏற்பட்ட மாற்றம், உணவுப்பொருட்கள் வாங்கும் தேவையை அதிகரித்தது.
கிராமப்புறங்களில் கூலி வேலைகளுக்கு செல்கிறவர்களின் கூலி ஆண்டுக்கு 20% அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் கிராமப்புற மக்களின் சாப்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களும் கூடுதலாக முட்டை, இறைச்சி, பால், காய்கறிகள், பயறுகள், பழங்கள் ஆகியவற்றை இப்போது சாப்பிடுகின்றனர் என்றார்.
சுப்பாராவின் இந்த பேச்சால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகள் சுப்பாராவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
கிராமப்புறவாசிகளும் மனிதர்கள்தானே!












Click it and Unblock the Notifications