முட்டை கோபி அப்பாவை பன்னீர் அடித்து விட்டார்.. பழிக்குப் பழி வாங்க நடு ரோட்டில் குஸ்தியில் குதித்த ரவுடிகள்
சென்னை: சென்னையைச் சேர்ந்த முட்டை கோபி என்ற ரவுடியின் அப்பாவை அடித்தவர்கபளைப் பழிக்குப் பழிவாங்க ரவுடிகள் கும்பலாக கிளம்பினர். இரு தரப்பும் நடு ரோட்டில் சரமாரியாகதாக்கிக் கொண்டது. போலீஸார் விரைந்து வந்து சிலரைக் கைது செய்தனர். தப்பியவர்களைத் தேடி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் முட்டை கோபி. இவர் ஒரு ரவுடியாம். இவரது தந்தையை அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் தாக்கிவிட்டார். இதற்கு பழிவாங்க கோபி தனது கூட்டாளிகளுடன் காரில் சென்றார். ரோட்டோர கடையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த பன்னீரின் நண்பர்கள், பாபு, மீனாட்சிசுந்தரம் ஆகியோரை தாக்கினார்கள். நடுரோட்டில் நடந்த இந்த மோதல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
துணை கமிஷனர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கோவி. மனோகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சம்பத், ரமேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ரவுடி கும்பலைச் சேர்ந் வினோத்குமார், விஜி ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கத்தி மற்றும் ஆயுதங்கள், கார் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான முட்டை கோபி உள்ளிட்டவர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications