எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல்தாள் விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: மறுதேர்வு இல்லை
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்கள் மாயமாகின. இதனால் மறுதேர்வு நடத்தப்படமாட்டாது என்றும் ஆங்கிலம் இரண்டாம் தாள் மதிப்பெண்களே முதல் தாளுக்கும் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வின்போது மாணவர்கள் எழுதிய ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்கள் மாயமாகின. 221 விடைத்தாள்கள் எப்படி காணாமல் போனது என்று போலீசார் விசாரணை நடத்தியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
விடைத்தாள்கள் காணாமல் போனதால் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் சட்டசபையில் தெரிவித்தார். இந்நிலையில் மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்வில் சத்தியமங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 221 மாணவர்களின் விடைத்தாள் கட்டுகள் சத்தியமங்கலம் அஞ்சல் நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லும்போது காணாமல் போனது.
இந்த நிலையில் மறுதேர்வு நடத்துவதால் மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படும் என்பதால் அவர்களின் நலன் பாதிக்காத வகையில் விடைத்தாள்கள் காணாமல் போன 221 மாணவர்களுக்கும் அவர்கள் ஆங்கிலம் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்களேயே ஆங்கிலம் முதல் தாளுக்கும் வழங்கி தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஆங்கிலம் இரண்டாம் தாளில் தோல்வி அடைந்திருந்தால் அவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதம் அளித்து அதில் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications