For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனைவியுடன் தகராறு: துபாயில் 10வது மாடியில் இருந்து குதித்து இந்திய வாலிபர் தற்கொலை

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் பணிபுரிந்த 27 வயது இந்தியர் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

துபாயில் பணிபுரிந்த 27 வயது இந்தியர் ஒருவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவர் மனைவியுடன் துபாய் ஜுமைரா ஏரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 10வது மாடியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதையடுத்து அந்த வாலிபர் தனது வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A 27-year-old Indian man allegedly committed suicide by here jumping off the 10th floor of his apartment building after a fight with his wife, police said. The man, who had been married for a year, had a fight with his wife after which she left the apartment in Jumierah Lake area. He then jumped from the balcony and died on the spot, local media reported quoting a senior police official.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X