அரக்கோணம் ரயில் விபத்து: பலியானவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்
சென்னை: அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்தவர் யார் என்று அடையாளம் தெரிந்தது.
அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்த உடல் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சோரம் போடி (52) என்பதும் அவர் பெங்களூர் வரை டிக்கட் பதிவு செய்து இருப்பது தெரியவந்தது. அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேர் உடல் நிலை மோசமானது. அவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் 2 பேர் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் கலெக்டர் சங்கர் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மீட்பு பணிகளை துரிதபடுத்தினர். அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பயணிகளை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.












Click it and Unblock the Notifications