For Daily Alerts
Just In
லோ பி.பி., மூச்சுத் திணறல்.. மருத்துவமனையில் அட்மிட் ஆன மம்தா பானர்ஜி!
டெல்லியில் திட்டக் கமிஷன் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சென்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை இடதுசாரி கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிதி அமைச்சர் அமித் மித்ரா தாக்கப்பட்டார்.
இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜிக்கு ரத்த அழுத்தம் குறைந்தது. இந்த லோ பிபி காரணமாக அவருக்கு மூச்சுத் திணறலும் மயக்கமும் ஏற்பட்டதையடுத்து டெல்லியில் சிகிச்சை எடுத்துக் கொண்டு உடனே கொல்கத்தாவுக்கு திரும்பினார்.
அங்கு அவர் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்காக அங்குள்ள பெல்லா வியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை வெளியிட மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட நிதியமைச்சர் அமித் மித்ரா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Comments
English summary
West Bengal Chief Minister Mamata Banerjee was yesterday admitted to a premier private clinic here with complaints of pain, breathing problem and palpitation and advised rest, shortly after returning from Delhi.