இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரும் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 தமிழக மீனவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 13ம் தேதி இந்திய - இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 34 பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்பினர்.
இந்த நிலையில், இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 19 மீனவர்களும், நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications