மூவரின் உயிரைக் காக்க முதல்வருக்கு மதிமுக கோரிக்கை
சென்னை: தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்து மூன்று தமிழர்களின் உயிர்களை காக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

உச்ச நீதிமன்றம் தேவேந்திரபால் சிங் புல்லர் மரண தண்டனையை உறுதிபடுத்தி தந்த தீர்ப்பு மனித உரிமை ஆர்வலர்களைப் பேரிடியாகத் தாக்கி உள்ளது. திருப்பெரும்புதூர் கொலை சம்பவத்தில் துளி அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் காவல்துறை துன்புறுத்திப் பெற்ற நீதிக்குப் புறம்பான ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு தடா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய அரசியல் சட்டம் 72-ஆவது பிரிவின்படி இந்தியக் குடியரசுத் தலைவருக்கும், இந்திய அரசியல் சட்டம் 161-ஆவது பிரிவின்படி மாநில ஆளுநருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் 72-ஆவது பிரிவின்படி குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம், 161-ஆவது பிரிவின்படி மாநில ஆளுநரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாது என்று அரசியல் சட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் தமிழக அமைச்சரவையைக் கூட்டி அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு முடிவெடுத்து மாநில ஆளுநர் மூலம் இந்த மனிதநேய முடிவைச் செயல்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
சென்னையில் பொதுக்கூட்டம்
பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவர் உயிரைக் காப்பாற்ற ஏப்ரல் 30-ஆம் தேதி தலைநகர் சென்னையில் மூன்று தமிழர் உயிர்காக்கும் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும், அதற்கான ஆக்கப் பணிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செய்வதென்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications