விஜயகாந்த் அவதூறு பேச்சு: ஏப். 17 ல் ஆஜராக நெல்லை கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த அவதூறு வழக்கில் வரும் 17ம் தேதி விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என்று நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடந்த தேதிமுக பொது கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் முதல்வர் பற்றி தவறான தகவல் கூறினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவரை தரக்குறைவாக பேசியதாகவும் மாவட்ட குற்றப்பிரிவு அரசு வக்கீல் முத்துகருப்பன் விஜயகாந்த் மீது நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு 3வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜாராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

நெல்லையில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பு செய்ததால் அவர்களும் நீதிமன்றத்தில் ஆஜாராகவில்லை. இதையடுத்து வெளியூரை சேர்ந்த ஆல்வின் என்ற வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது வரும் 17ம் தேதி விஜயகாந்த் கோர்ட்டில் கண்டிப்பாக ஆஜாராக வேண்டும் என்று நீதிபதி கமலாவதி உத்தரவிட்டு வழக்கை ஓத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+