தூக்கு மேடையில் புல்லர்- பிரதமரிடம் நேரில் கருணை மனு கொடுத்தார் பஞ்சாப் முதல்வர்!

1993ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் 9பேர் பலியாகினர். இதில் காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த புல்லர் கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு 2003ஆம் ஆண்டு அவர் கருணை மனு அனுப்பினார். ஆனால் இந்த கருணை மனுவை 8ஆண்டுகால தாமதத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவர் நிரகாரித்தார். தமது கருணை மனுவை குடியரசுத் தலைவர் தாமதமாக நிராகரித்ததால் தமது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யா பெஞ்ச் நிராகரித்து தள்ளுபடி செய்தது. இதனால் புல்லருக்கு தூக்கு தண்டனை உறுதியானது.
ஆனால் புல்லரை தூக்கிலிடுவதற்கு ஒட்டுமொத்தமாக பஞ்சாப் மாநிலம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தின் ஆளும் சிரோமணி அகாலி தள அரசின் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் மற்றும் அவரது மகனான துணை முதல்வர் சுக்பீர் சிங் ஆகியோர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது புல்லருக்கு கருணை காட்டக் கோரும் மனுவை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இருவரும் கொடுத்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரகாஷ்சிங் பாதல், புல்லரை தூக்கிலிட்டால் பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கும்.இது தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். புல்லருக்கு கருணை காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இந்தத் தீர்ப்பினால் கொந்தளிப்பான ஒரு நிலைபஞ்சாப்பில் இருந்து வருகிறது என்றார் அவர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications