குஜராத் குல்பெர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் நரேந்திர மோடி விடுவிப்பை எதிர்த்து மனு
அகமதபாத்: குஜராத்தின் குல்பெர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சிறப்பு புலனாய்வுக் குழு நிரபராதிகள் என அறிவித்ததை எதிர்த்து விசாரணை நீதிமன்றத்தில் ஜாக்கியா ஜாஃப்ரி முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குல்பெர்க் சொசைட்டி பகுதியில் காங்கிரஸ் எம்.பி.யான் இஷான் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட 68 பேரை சேர்க்கக் கோரி இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கிய ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழு உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தியது. ஆனால் அக்குழு நரேந்திர மோடி குற்றவாளி அல்ல என தீர்ப்பளித்தது.
இருப்பினும் இதை எதிர்த்து விசாரணை நீதிமன்றத்தில் முறையீட்டு மனுத்தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஜாக்கியா ஜாஃப்ரிக்கு அனுமதி கொடுத்தது.
இதைத் தொடர்ந்து இன்று விசாரணை நீதிமன்றத்தில் ஜாக்கியா ஜாஃப்ரி முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். அதில் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சிறப்பு புலனாய்வுக் குழு விடுவித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications