பெங்களூர் ஹெப்பால் மேம்பாலத்தில் இன்னொரு குண்டு வெடித்ததாக புரளி!

பின்னர் அது ஒரு மைதானத்தில் நடந்த கேஸ் சிலிண்டர் வெடிப்பு என்றும், அதில் 16 பேர் காயமடைந்தாகவும் தகவல் பரவியது.
ஆனால், ஹெப்பாலில் குண்டு வெடிப்போ அல்லது கேஸ் சிலிண்டர் வெடிப்போ நடக்கவில்லை என்றும், அது முழுக்க முழுக்க புரளி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதலில் இதுவும் குண்டுவெடிப்பு என்று தகவல் பரவியதால் பெங்களூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இது குண்டுவெடிப்பு அல்ல, சிலிண்டர் வெடிப்பு தான் என போலீசார் கூறினர்.
பின்னர், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, அது முழுக்க முழுக்க புரளி என்று கூறினர்.
முதலில் பாஜக அலுவலகத்தின் வெளியே வெடித்ததும் சிலிண்டர் தான் என்று கூறப்பட்டது. பின்னரே இது குண்டு வெடிப்பு என்பது உறுதியானது. இந் நிலையில், ஹெப்பாலில் முதலில் குண்டு வெடித்ததாகக் கூறப்பட்டு பின்னர் கேஸ் சிலிண்டர் வெடிப்பு என்று கூறப்பட்டு, இறுதியில் அது புரளி என்றாகியுள்ளது.












Click it and Unblock the Notifications