பாலியல் தொழிலாளிகளின் வருமானத்தில் உல்லாச வாழ்க்கை: சிங்கப்பூரில் 2 இந்தியர்கள் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூரில் வாழும் தமிழ் செல்வன் (28), ஆனந்த பிரபு (25) ஆகியோர் 4 பெண்களை சிங்கப்பூர் அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
அந்த பெண்களின் வருமானத்தில் உல்லாசமாக வாழ்க்கை நடத்தினர். இதை அறிந்த போலீசார், தமிழ் செல்வன், ஆனந்த பிரபு மீது வழக்குத் தொடர்ந்து கைது செய்துனர்.
அவர்கள் மீதான வழக்கு வரும் 29ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் விபசாரத்தில் ஈடுபடுத்த பெண்களை அழைத்துவந்த குற்றத்திற்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
மேலும், விபசாரிகளின் வருமானத்தில் வாழ்ந்த குற்றத்திற்காக கூடுதலாக தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளி அபராதமும் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications