நில அபகரிப்பு: கூடுதல் டிஜிபி ஜாங்கிட் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

வழக்கு என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம், வடநெமிலி கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் அப்பகுதி கிராம மக்களின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வடநெமிலி மக்களின் பொது உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 9.60 ஏக்கர் நிலத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் மற்றும் சென்னை புறநகர் முன்னாள் ஆணையர் ஜாங்கிட் ஆகியோர் ரவிச்சந்திரன் மற்றும் சந்திரசேகரன் ஆகிய அவர்களது பினாமிகள் மூலம் அபகரித்துள்ளனர். இதனால் கிராம மக்கள் பொது பாதையை பயன்படுத்த முடியாமலும் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாமலும் அவர்களது அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு புகாரில் 2011 ஜூலை மாதம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீதிமன்றம் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார். மேலும் உயர் அதிகாரிகள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால் காவல் துறை முறையாக விசாரணை நடத்த தயங்குகிறது என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வேறு நீதிபதிக்கு மாற்றம்
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கும் நிலையில் இவ்வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்தார் அவர். தலைமை நீதிபதியின் உத்தரவின்பேரில் இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கு விசாரணையில் இருந்தபோது, குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் இவ்வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு செய்தனர். பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு செய்திருந்தார். மூவர் மனுவையும் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
விசாரணைக்கு உத்தரவு
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, இந்த விவகாரத்தில் அரசு விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபார்த்துவிட்டது. இருப்பினும் உயர் அதிகாரிகள் மீது புகார் கூறப்படுவதால் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்றார். விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட கடித எண் என்ன என்று மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. தன்னுடைய வாதத்தை உறுதிமொழியாக நீதிமன்றம் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார் சோமையாஜி. அரசு தலைமை வழக்கறிஞர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருபாகரன் வழக்கை முடித்து வைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications