அணு உலையில் பாதிக்கப்பட்ட 4 வால்வுகள் மாற்றப்பட்டன: அணு உலை கண்காணிப்பு குழு

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ள அணு உலைகளில் சோதனை ஓட்டம் நடைபெற்றபோது அதில் சில வாழ்வுகள் பழுதடைந்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை நீக்கிவிட்டு மாற்றப்பட்டு விட்டன. புதிதாக வால்வு பொருத்தப்பட்டு அவை சரி செய்யப்பட்டுவிட்டன. அவை பொருத்தமான வால்வுகளாக உள்ளன. இவை திருப்தி அளிப்பதாக என்.பி.சி.ஐ.எல் சான்று அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி பழுது
கூடங்குளம் அணு உலையில் பலமுறை வால்வுகள் பழுதடைந்துள்ளன. சில முறை வால்வுகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது மீண்டும் 4 பழுதடைந்த வால்வுகள் மாற்றப்பட்டுள்ளன. அணு உலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமற்றதாக இருக்கின்றன எனவே கூடங்குளம் அணு உலை பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்று அணு உலைக்கு எதிரானவர்கள் கேட்கின்றனர்.
முற்றுகைப் போராட்டம்
இதனிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் தரைவழி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அணு உலைக்கு எதிரான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தலைமையில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து கூடங்குளம் நோக்கி பேரணியாகச் சென்று, அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது பேசிய அவர், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தரமற்ற உபகரணங்களும், உதிரிபாகங்களும் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தரமற்ற பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அணுஉலையை இயக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகமே இந்த பேரணி நடத்தப்படுவதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லவில்லை. கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications