தூத்துக்குடியில் துக்கம் விசாரிக்கச் சென்ற 3 வாலிபர்கள் லாரி மோதி பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே துக்கம் விசாரிக்க சென்ற 3 வாலிபர்கள் லாரி மோதி பலியாகினர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் பட்டுராஜ். இவர் விளாத்திக்குளம் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று தனது உறவினர்கள் வெற்றிவேல், பொன்செல்வம் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இவர்களது, இருசக்கர வாகனம் கிழக்குகடற்கரை சாலையில் தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் தெற்குகல்மேடு பகுதியில் சென்றபோது பட்டுராஜ் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்தகாயம் அடைந்த வெற்றிவேல், பொன்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பட்டுராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்துகுறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications