கனடாவில் ரயிலை கவிழ்க்க அல்-கொய்தா சதி: அமெரிக்க உதவியுடன் 2 பேர் கைது!

இது குறித்து டொரண்டோவில் நிருபர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரியான ஜேம்ஸ் மலிஷியா கூறுகையில்,
சிகப் எஸஹெர் (35), ரெயிட் ஜாசர் (30) ஆகிய இருவரும் கனடாவின் வயா ரயில் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து சில காலமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
டொரண்டோவில் இந்த ரயில் நிறுவனத்தின் கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்து வந்தனர்.
இவர்களுக்கு ஈரானில் உள்ள அல்-கொய்தா அமைப்பினரிடம் இருந்து உத்தரவுகள் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தச் சதித் திட்டத்தில் ஈரான் அரசுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
கைது செய்யப்பட்ட இருவரும் கனடா பிரஜைகள் அல்ல. அவர்கள் எந்த நாட்டினர் என்பதை இப்போது வெளியிட இயலாது.
இந்த இருவரும் ரயிலைக் கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை சில காலத்துக்கு முன்பே தெரிந்து கொண்டு இருவரையும் ரகசியமாக கண்காணித்து வந்தோம் என்றார்.
ஆனால், இவர்கள் எந்த ரயிலைக் கவிழ்க்க முயன்றனர் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
வயா ரயில் நிறுவனம் கனடா அரசுக்கு சொந்தமானதாகும். இந்த ரயில் நிறுவனம் அம்ட்ராக் ரயில் நிறுவனத்துடன் இணைந்து டொரண்டோவில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் பென் ஸ்டேசனுக்கும் ஒரு ரயிலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சிகப் எஸஹெர் கனடாவின் க்யூபெக் நகரில் உள்ள ஷெர்ப்ரூக் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு இப்போது மாண்ட்ரியலில் உள்ள Institut National de la Recherche Scientifique மையத்தில் உயிரியல் படித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த இருவரையும் கண்காணிப்பதிலும் கைது செய்வதிலும் அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பும் கனடா போலீசாருக்கு உதவியுள்ளது. இரு நாடுகளின் உளவுப் பிரிவுகளும் இணைந்தே இவர்களைப் பிடித்ததாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
அல்-கொய்தா சன்னி பிரிவைச் சேர்ந்தது. அவர்களை ஷியா ஆதிக்கம் கொண்ட ஈரான் எந்தக் காலத்திலும் ஆதரித்ததில்லை. அப்படியிருக்கையில் ஈரானில் எப்படி அல்-கொய்தா இயக்கத்தினர் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஜேம்ஸ் மலிஷியா பதிலளிக்கவில்லை.
கடந்த மாதம் கனடாவைச் சேர்ந்த இருவர் அல்ஜீரியாவில் ஒரு எரிவாயு ஆலையின் மீது நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் பலியானது குறிப்பிடத்தக்கது.
அதே போல கடந்த 2006ம் ஆண்டு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி டொரண்டோவில் 18 பேரை கனடா கைது செய்தது. இதில் 11 பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. 7 பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications