எதிர்பாராமல் பெற்றோரால் கொலையான ஆருஷி: நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி விளக்கம்!

2008ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நள்ளிரவில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார் ஆருஷி. அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ஆருஷியையும் வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜையும் ஆருஷியின் பெற்றோரே கொலை செய்தனர் என தெரியவந்துள்ளது.
காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜரான சிபிஐ அதிகாரி கெளல், சம்பவம் நடந்த நாள் நள்ளிரவில் திடீரென சப்தம் கேட்டிருக்கிறது. அப்போது எழுந்த ஆரூஷியின் தந்தை ராஜேஸ், வேலைக்காரன் ஹேம்ராஜ் அறையில் எட்டிப்பார்த்திருக்கிறார். அங்கு சப்தம் வரவில்லை. பின்னர் மகள் ஆருஷி அறையில் சப்தம் வர அவர் சென்று பார்த்த போது இருவரும் படுக்கையில் ஒன்றாக இருந்திருக்கின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆரூஷியின் தந்தை ஹேமராஜை கோல்ப் ஸ்டிக்கால் அடித்திருக்கிறார். முதல் அடி ஹேமராஜ் மீது பட்டுள்ளது. இரண்டாவது முறையாக அடிக்க முயன்ற போது ஹேமராஜ் தலையை திருப்பிக் கொண்டதால் அது ஆரூஷியின் தலையில்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார் ராஜேஸ் தல்வாரின் மனைவி நுபுர் தல்வார். இருவரையும் கொலை செய்து அதை மூடி மறைத்து அனைத்து தடயங்களையுமே ஆரூஷியின் பெற்றோரே அழித்தும் இருக்கின்றனர். இதில் ராஜேஸ் தல்வாரின் உறவினர்கள் இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்று கெளல் விவரித்திருக்கிறார்.
அதே நேரத்தில் ராஜேஸ் தல்வார் மற்றும் அவரது மனைவியை கைது செய்யக் கூடாது உயர் அதிகாரிகள் எனக்கு அழுத்தம் கொடுத்தனர் என்றும் கெளல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications