சரப்ஜித் சிங் தாக்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசு மீது மோடி சாடல்!

லாகூர் சிறையில் கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு கோமா நிலையில் இருக்கும் சரப்ஜித் சிங்கை இந்திய அதிகாரிகள் குழு பார்வையிட்டு வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞர் அலுவலகம் மூலம் நடைபெற்ற அனைத்து குஜராத்திய அரசு வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, மத்திய அரசு சரப்ஜித் சிங் விவகாரத்தில் நடந்துகொண்டதில் இருந்து தெரியவருவது, அனைத்து வழிகளிலும் அதன் வெளிவிவகாரக் கொள்கைகள் முற்றிலும் செயல் இழந்து கிடப்பதையே காட்டுகிறது... .
இத்தாலிய கடற்படை வீரர்கள் விவகாரம், சீனா நம் மண்ணில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது,. நம் படைவீரர்கள் பாகிஸ்தானியர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டது, சரப்ஜித் சிங் விவகாரம் அனைத்துமே இதற்கு சாட்சி. நமது அரசு நமது உண்மைக் கொள்கைகளை பிரசாரம் செய்ய முடியவில்லை என்பதையே இவை காட்டுகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications