தேர்தல் வழக்கு- சென்னை ஹைகோர்ட்டில் மு.க. அழகிரி ஆஜராகி விளக்கம்!

வழக்கு என்ன?
கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மதுரை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட மு.க. அழகிரி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்ட பி.மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதன் காரணமாகவே அழகிரி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார் என்பது மோகனின் வாதம். மேலும் தேர்தலில் வெற்றிபெற மு.க.அழகிரி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க 34 ஏஜெண்டுகளை நியமித்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார் மோகன்.ஆனால் வழக்கு நிலுவையில் இருந்த போது மோகன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தம்மை மனுதாரராக ஏற்று இந்தத் தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாற்று வேட்பாளர் ஏ.லாசர் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அழகிரி விளக்கம்
இந்த வழக்கு நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க. அழகிரி நீதிமன்றத்தில் ஆஜராகி தம் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார். தேர்தலின்போது வாக்காளர்கள் யாருக்கும் தமது தரப்பில் பணம் எதுவும் தரவில்லை என்று கூறிய அழகிரி தேர்தல் முறைகேடு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது உண்மையில்லை என்றும் கற்பனையானது என்றும் தெரியாது என்றும் அவர் பதிலளித்தார். வாக்குச் சேகரிக்கும் பணியின்போது பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து தன்னை வரவேற்றது உண்மைதான் என்று கூறிய அழகிரி அதற்காக அவர்கள் யாருக்கும் தனது தரப்பில் பணம் எதுவும் தரவில்லை என்றார்
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி தனபாலன் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications