கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் : ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் பிரேஸர்
சிட்னி :இலங்கை தலைநகர் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் பிரேஸர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க போவதாக கனடா நாடு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டிலும் இது தொடர்பாக கோரிக்கை வலுத்து வருகிறது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அரசுக்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரேஸர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறும் மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக தாம் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் பிரதிகளையும் அவர் அரசுக்கு அனுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications