ஆற்றில் சாகச முயற்சி மரணத்தில் முடிந்தது: 'கின்னஸ்' சாதனையாளர் பலி

Subscribe to Oneindia Tamil

Stuntman dies during world record
கொல்கத்தா: சாதனை முயற்சியில், எதிர்பாராவிதமாக டீஸ்டா ஆற்றில் விழுந்து மாரடைப்பால் 'கின்னஸ்' சாதனையாளர் சைலன் பலியானார்.

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சைலேந்திர நாத் ராய் (50). இவர், கடந்த ஆண்டில் டார்ஜிலிங் ரெயிலை முடியால் கட்டி இழுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர்.

சிலிகிரி அருகே உள்ள செலோக் என்ற இடத்தில் டீஸ்டா ஆற்றின் குறுக்கே கயிற்றை கட்டி ராட்டினத்தின் மூலம் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்லும் சாதனையை இவர் நேற்று நிகழ்த்தினார். கயிற்றில் தொங்கியபடி சிறிதுதூரம் வரை சென்ற சைலன் நாத் ராய், திடீரென்று ராட்டினம் சிக்கிக் கொண்டதால் தலை குப்புற ஆற்றில் விழுந்தார்.

சாகசத்தைக் காண கூடி நின்ற மக்கள், இந்த எதிர்பாராத விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் சிலர் ஆற்றில் குதித்து அவரை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக கூறினர். சாகசத்தின் போது உயிரிழந்த சைலன் நாத் ராய், மேற்கு வங்காள போலீஸ் துறையில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+