சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி 5 ஆக உயர்வு 3 பேர் கைது
சிவகாசி: சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக 3 பேரைக் போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த நாரணபுரத்தில் உள்ள ரத்னா பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதில் முருகன் என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்ராஜ் என்ற தொழிலாளி, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூன்று பேர் கைது
இந்த விபத்திற்கு சட்ட விதிமுறைகளை மீறி மருந்து தயாரித்ததே முக்கியக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தொழிற்சாலையின் கணக்காளர் உட்பட 3 பேரைக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
உரிமம் ரத்து
மேலும், தலைமறைவாக உள்ள உரிமையாளரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதை அடுத்து பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications