For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தலில் ஆயுதப் படை போலீசுக்கு தொடர்பு? உள்ளிட கும்பலிடம் விசாரணை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி மிரட்டியது தொடர்பான ஆயுதப்படை போலீஸில் பணிபுரியும் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

கூடல்நகரில் உள்ள ரயிலார்நகர் கம்பராஜன் என்பவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவரை இரண்டு தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தியது. ராஜபாளையம் அருகே காட்டுப் பகுதிக்குச் சென்ற அவர்கள், விடுவிக்க வேண்டுமானால், ரூ. 5 லட்சம் வரை தரவேண்டும் என்று கேட்டு கம்பராஜனை துன்புறுத்தியதாகத் தெரிகிறது.

கணவர் கடத்தப்பட்டது தொடர்பாக கம்பராஜனின் மனைவி ஜான்சிராணி கூடல்புதூர் போலீஸில் புகார் அளித்தார். இதனையடுத்து கம்பராஜனை கடத்திய மர்மக்கும்பல், அவரை விடுவித்தது. இதுகுறித்து, மதுரையில் ஆயுதப் படை போலீஸ்காரர் வெங்கடேசன் என்பவர் உள்ளிட்ட கும்பலிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் ஆயுதப் படை போலீசாரிடம் விசாரணை நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A real estate owner was kidnapped in Madurai Police are probing a police constable and other.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X