8 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 8 கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி மூன்றாவது முறையாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த பிறவியிலாவது தன்னை பெண்ணாக படைத்துவிடாதே என்று கடவுளுக்கு அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள பர்ஷ் பஜார் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த மாதம் 15-ந்தேதி அவளது 10 வயது தம்பியுடன் சேர்த்து கடத்தப்பட்டாள்.

காசியாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் 9 நாட்கள் அந்த சிறுமியை அடைத்து வைத்து 8 பேர் மாறி, மாறி பலாத்காரம் செய்தனர். கடும் போராட்டத்துக்குப் பிறகு அந்த சிறுமி அந்த வீட்டில் இருந்து தப்பினாள்.

வீடு திரும்பிய அவள் கடும் மனஉளைச்சல் காரணமாக 2 தடவை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டாள். அவள் தற்கொலை எண்ணத்துடன் இருந்ததால் கடந்த 22-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவள் நேற்று மாத்திரைகளை நிறைய தின்று 3வது முறையாக தற்கொலைக்கு முயன்றாள்.

பெண்ணாக படைக்காதே

தற்கொலைக்கு முயலும் முன்பு அந்த சிறுமி தன் தாயார் செல்போனில் பேச்சை பதிவு செய்துள்ளாள். அதில், அவள், இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை. கடவுளே... அடுத்த பிறவியிலாவது என்னை பெண்ணாக படைக்காதே. சாவில்தான் எனக்கு அமைதி கிடைக்கும் என்று நினைக்கிறேன். எனது இந்த முடிவுக்காக என்னை திட்டாதீர்கள். முடிந்தால் என் சாவுக்குப் பிறகு என்மீது அன்பு காட்டுங்கள் என்று கூறி உள்ளாள்.

தற்கொலைக்கு முயன்ற சிறுமியின் உயிரை டாக்டர்கள் கடுமையாக போராடிக் காப்பாற்றினர். இதையடுத்து அந்த சிறுமிக்கு கூடுதல் பாதுகாப்பும், கண்காணிப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+