வேலூர் சிறையில் ராஜீவ் கொலையாளிகள் அருகே அடைக்கப்பட்டுள்ள 'பவர் ஸ்டார்'
Subscribe to Oneindia Tamil

பவர் ஸ்டார் சீனிவாசன் ஆந்திர தொழில் அதிபர் ரங்கநாதனுக்கு ரூ.20 கோடி கடன் வாங்கித் தர அவரிடம் கமிஷனாக ரூ. 50 லட்சம் பெற்றார். பவர் கடனையும் வாங்கிக் கொடுக்கவில்லை, கமிஷனையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து ரங்கநாதன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவர் கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு அவர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் ஹெச்.எஸ்.1 பிளாக்கில் பவர் அடைக்கப்பட்டுள்ளார். அதன் அருகில் உள்ள ஹெச்.எஸ்.2 பிளாக்கில் தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோர் உள்ளனர்.
பவர் ஸ்டாரை பிற கைதிகள் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications