சான் பிரான்சிஸ்கோவில் 4ம் தேதி சாலமன் பாப்பையா பட்டிமன்றம்
Subscribe to Oneindia Tamil

சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ்மன்றம் சார்பில் சித்திரை திருவிழா தொடர்ச்சியாக பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையிலான பட்டிமன்றம் பிரிமாண்ட் நகரில் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு வாழ்க்கையில் வெற்றி பெற பெரிதும் தேவை? தடைகளைத் தாண்டும் தைரியமே! நெளிவு சுளிவு கண்டு நீந்தும் நிதானமே! என்பதாகும்.
சித்திரை வெயிலில் வாடும் வளைகுடா பகுதி தமிழர்கள் தமிழ் மழையில் நனைந்து மகிழ்ச்சி கடலில் மூழ்க இது ஒரு அரிய வாய்ப்பாகும். இந்த நிகழ்ச்சி பற்றி மேலும் அறிய http://www.bayareatamilmanram.org என்ற வலைதளத்துக்கு செல்லவும்.












Click it and Unblock the Notifications