தொண்டாமுத்தூர் அருகே ஜெயலலிதா பேரவை அலுவலகத்திற்கு தீ: மர்ம நபர்களுக்கு வலை
Subscribe to Oneindia Tamil
கோவை: தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஜெயலலிதா பேரவை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ளது கலிக்கநாயக்கன்பாளையம். அங்கு இருக்கும் எம்.ஜி.ஆர். நகரில் ஜெயலலிதா பேரவை அலுவகம் ஒன்று இருந்தது.
தென்னங்கீற்றாலான அந்த அலுவலகத்தில் இன்று மே தின கொண்டாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதற்குள் யாரோ நேற்று இரவு அலுவலகத்திற்கு தீ வைத்தனர். இதில் அலுவலகம் எரிந்து சாம்பலானது.
இன்று காலை அலுவலகத்திற்கு வந்த போது அது எரிந்து கிடப்பதைப் பார்த்த கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் நடந்த சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார், எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
பேரவை அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications