மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் இரு பெண்கள் மீது ஆசிட் வீச்சு!
மும்பை: மும்பையில் பாந்த்ரா ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து இறங்கிய சகோதரிகள் இருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத. இந்த தாக்குதலில் அவருடைய தந்தையும் பாதிக்கப்பட்டார்.
இன்று காலை 8.15 மணியளவில் டெல்லியில் இருந்து வந்த ரயிலில் தந்தையுடன் இரண்டு பெண்கள் இறங்கினார்கள். அவர்கள் நூறு ரயிலில் இருந்து இருவரும் இறங்கி நூறு அடி தூரம் கூட நடந்து சென்றிருக்க மாட்டார்கள்.
அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வேகமாக ஓடி வந்து இருவர் மீதும் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிவிட்டான். என்ன நடந்தது என்பதை அறியும் முன்னதாகவே அவன் ஓடிவிட்டதால் ஆசிட் வீசியது யார் என்பதை கண்டறிய முடியவில்லை.
இந்த சம்பவத்தில், அவர்களுடன் வந்த அவரது தந்தை மற்றும் பயணி ஒருவரும் காயம் அடைந்தனர். நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிட் வீச்சு சம்பவம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications