அ.தி.மு.க எம்.எல்.ஏ வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: கார், வீடு சேதம்
சென்னை: செய்யூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார், வீடு சேதம் அடைந்தது.
பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் கைது நடவடிக்கையை தொடர்ந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
வேலூர் மாவட்டம் செய்யூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ வி.எஸ்.ராஜி வீட்டில் நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வெடிச்சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி ஓடியுள்ளது.
இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் எம்.எல்.ஏவின் கார், வீடு சேதம் அடைந்தது. இது குறித்த புகாரின் பேரின் செய்யூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் செய்யூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications