ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாக். கைதி உயிர்பிழைப்பது கஷ்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்
சண்டிகர்: ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். இதனால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதட்டம் நிலவுகிறது. அங்கு போராட்டங்களும் வெடித்துள்ளன.
பாகிஸ்தானை சேர்ந்தவர் சனாவுல்லா. இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக இவர் 1999-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது தடா சட்டப்படி 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வழக்குகளில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சனாவுல்லா காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள காட்பல்வால் ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வந்தார்.
நேற்று முன்தினம் அவரை சககைதியான வினோத்குமார் என்பவர் கூர்மையான ஆயுதத்தால் கடுமையாக தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த சனாவுல்லா நினைவிழந்த நிலையில் முதலில் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் சண்டிகாரில் உள்ள பி.ஜி.ஐ. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இந்த நிலையில் சனாவுல்லா இன்று ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
அவரது உடல் நிலை தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே உள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், உயிர் பிழைப்பது கஷ்டம் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பாகிஸ்தான் கைதி சனாவுல்லா தாக்கப்பட்டதை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடந்தது. 200-க்கும் மேற்பட்டோர் ரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சனாவுல்லாவை தாக்கிய கைதி வினோத்குமார் 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சரப்ஜித் சிங்கை தாக்கி கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் கைதி தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications