பல்கலைக் கழகமான ஜெயில்: ஜெயில்சிங்கின் 97வது பிறந்தநாள் கொண்டாட்டம்
பரித்கோட்: பஞ்சாப் மாநிலம், சுதந்திரத்திற்காக போராடிய போது,5 ஆண்டுகள் பரித்கோட் ஜெயிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் இருந்ததன் நினைவாக அவரது 97-வது பிறந்தநாள் விழா அந்த ஜெயிலிலேயே கொண்டாடப்பட்டது.
கியானி ஜெயில் சிங் 1916ம் ஆண்டு பிறந்தவர். இவர் 1982 முதல் 1987 வரை இந்தியக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, கடந்த 1938 முதல் 1943 வரை 5 ஆண்டுகள் ஜெயில்சிங் பரித்கோட் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயில்சிங் அடைக்கப்பட்டிருந்த ஜெயில்அறை தற்போது பாரம்பரியசின்னமாக பராமரிக்கப்படுகிறது. இந்த ஜெயில், இப்போது பாபா பரித் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சகாரா கிளப் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், கிளப் நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சியினரும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications