4 ஆண்டுகளில் ஓடும் ரயிலில் 2 பிரசவம்: இரண்டிலுமே இரட்டைக் குழந்தைகளை பெற்ற உ.பி. பெண்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ரயிலில் இரண்டாவது முறையாக இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள குந்தரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹபிபுல்லா. அவரது மனைவி ஜுபின் நிஷா. அவர்களுக்கு 4 வயதில் இரட்டைக் குழந்தைகள்(ஆண், பெண்) உள்ளனர். இந்நிலையில் நிஷா மீண்டும் கர்ப்பமானார். பிரசவத்திற்காக நிறைமாத கர்ப்பிணியான நிஷா மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஹபிபுல்லா நேற்று குஷிநகர் எக்ஸ்பிரஸில் மும்பையில் இருந்து கோண்டா சென்றார்.

ரயில் உன்னாவ் மற்றும் லக்னோ இடையே செல்லும்போது நிஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

ரயிலிலியே பிரசவம்

ரயிலிலியே பிரசவம்

ரயில் லக்னோவை அடையும் முன்பே நிஷா மீண்டும் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். இரண்டுமே ஆண் குழந்தைகள்.

லக்னோ மருத்துவமனையில் அனுமதி

லக்னோ மருத்துவமனையில் அனுமதி

ரயில் லக்னோவை அடைந்தவுடன் தாயும், குழந்தைகளும் அங்குள்ள ராணி மேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முதல் பிரசவமும் ரயிலில் தான்

முதல் பிரசவமும் ரயிலில் தான்

நிஷாவின் முதல் பிரசவமும் ஓடும் ரயிலில் தான் நடந்துள்ளது. முதல் பிரசவத்திலும் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+