ஆருஷி -ஹேமராஜ் கொலை: தல்வார் கோரிக்கை குறித்து சிபிஐ கோர்ட் இன்று முடிவு
டெல்லி: டெல்லியை உலுக்கிய ஆருஷி, ஹேமராஜ் கொலை வழக்கில் கைதான டாக்டர் தம்பதி ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தம்பதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனு குறித்து இன்று சிபிஐ கோர்ட் தீர்மானிக்கவுள்ளது
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணை நடைமுறைகள் அனைத்தும் முடியும் வரை தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி சிபிஐ கோர்ட்டில் தல்வார் தம்பதி மனு செய்துள்ளது. இதன் மீதுதான் இன்று சிபிஐ கோர்ட் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
முன்னதாக நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தல்வார் தம்பதி ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், இந்த வழக்கின் 14 சாட்சிகளையும் விசாரணை கோர்ட்டில் மீண்டும் அழைத்து வாக்குமூலம் பெற வேண்டும் என்று கோரியிருந்தனர்.
ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்கனவே சிபிஐ கோர்ட் நிராகரித்து விட்டது என்பது நினைவிரு்கலாம். இதனால்தான் சுப்ரீம் கோர்ட்டை தல்வார் தம்பதி அணுகியுள்ளது.
இந்த இரட்டைக் கொலை வழக்கில் தல்வார் தம்பதிதான் முக்கியக் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 14 வயதான ஆருஷியும், வேலைக்காரர் ஹேமராஜும் தல்வார் வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். அவர்களைக் கொலை செய்தது யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. இறுதியில் தல்வார் தம்பதிதான் இந்தக் கொலைகளைச் செய்தது என்று சிபிஐ தெரிவித்து இருவரையும் கைது செய்தது.












Click it and Unblock the Notifications