நடுரோட்டில் 2 சாப்ட்வேர் என்ஜினியர்களை அடித்து நொறுக்கிய சிரஞ்சீவி மகனின் பாதுகாவலர்கள்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடிகரும், அமைச்சருமான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் பாதுகாவலர்கள் நடுரோட்டில் 2 என்ஜினியர்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
நடிகரும், அமைச்சருமான சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண் தேஜா கடந்த ஞாயிற்றுக்கினமை தனது ஆஸ்டன் மார்டின் காரில் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார். அவரது கார் தாஜ் கிருஷ்ணா சிக்னலில் நின்றது. அப்போது அவரது காரை இடதுபுறம் திருப்ப முடியாதபடி ஒரு மாருதி கார் குறுக்கே நின்றது.
இதனால் ஆத்தரிமடைந்த ராம்சரண் அந்த காரை முந்திச் சென்று வழிமறித்தார். அந்த மாருதி காரில் இருந்த பனிஷ், கல்யாண் ஆகிய 2 சாப்ட்வேர் என்ஜினியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது பாதுகாவலர்களுக்கு போன் செய்யவே அவர்கள் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்து அந்த 2 சாப்ட்வேர் என்ஜினியர்களையும் நடுரோட்டில் அடித்து நொறுக்கினர். அப்போது ராம்சரண் காருக்குள் அமர்ந்திருந்தார்.
இதையடுத்து அந்த 2 என்ஜினியர்களும் இது குறித்து பஞ்சரா ஹில்ஸ் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் இது குறித்து சிரஞ்சீவியோ அல்லது அவரது மகனோ எதுவும் தெரிவிக்கவில்லை.
ராம்சரண் தேஜாவின் பாதுகாவலர்கள் என்ஜினியர்களை புரட்டி எடுக்கும் புகைப்படங்கள் இதோ...

அடிவாங்கும் என்ஜினியர்கள்
அட்ரா அட்ரா நல்லா அடிடா.

என்ஜினியர்கள்
குத்து குத்து முன்னாடி நிற்பவனை குத்து.

ஆத்திரத்தில் பாதுகாவலர்கள்
ராம்சரண் காரையா மறிக்கிற, இந்தா வாங்கிக்கோ..












Click it and Unblock the Notifications