நிலக்கரி ஊழல் நடந்தது எப்படி?:
2. அதே ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு நோட் அனுப்பப்படுகிறது. அதில், நிலக்கரி ஏலம் தொடர்பான உத்தரவில் பல தவறுகள் இருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
3. அதே ஆண்டு நவம்பர் 1ம் தேதி பிரதமர் அலுவலகம் நிலக்கரி சுரங்க சட்டத்தில் (Coal Mines (Nationalisation) Act, 1973) திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இந்தத் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஏலம் மூலம் சுரங்கங்களை விற்க முடியும்.
4. சட்டத்தில் திருத்தம் கொண்டு வர காலதாமதம் ஆகும் என்பதால் இந்த சுரங்கங்களை ஒரு கமிட்டி மூலம் (screening committee) தொழில்துறையினருக்கு விற்பது என்று 2005ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பிரதமர் அலுவலகம் முடிவு செய்கிறது.
5. 2006ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி நிலக்கரி மட்டுமல்லாமல் அனைத்து கனிம வளங்களையும் ஏலம் மூலம் விற்கலாம் என்று பிரதமர் அலுவலகம் முடிவு செய்கிறது. இதையடுத்து இது தொடர்பாக சட்ட அமைச்சகத்தின் கருத்தை அறியுமாறும், இது சாத்தியமா என்பதை அறியுமாறும், கனிம வளத்துறையை, அதை நிர்வகிக்கும், நிலக்கரித்துறை அமைச்சகம் அறிவுறுத்துகிறது.
6. அதே ஆண்டு ஆண்டு ஜூலை 28ம் தேதி சட்ட அமைச்சகம் மத்திய அரசுக்கு ஒரு கேள்வியை எழுப்புகிறது. சுரங்க ஏலத்தை ஒரு உத்தரவு மூலம் அமலாக்கலாமா அல்லது இதற்காக சட்டம் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யுமாறு அதில் சட்ட அமைச்சகம் கோரிக்கை வைக்கிறது.
7. அதே ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி நிலக்கரித்துறை அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு குறிப்பை அனுப்புகிறது. அதில், எம்எம்டிஆர் சட்டத்தில் (MMDR Act, 1957) திருத்தம் கொண்டு வந்து, டெண்டர் மூலம் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்களை சட்ட அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக நிலக்கரித்துறை தெரிவிக்கிறது.