கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி: கரூரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கரூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை கரூர் மாவட்ட காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இதனை கொண்டாடும் வகையிலும், மேலும் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவராக கலையரசன் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையிலும் மாநில சேவாதள செயலாளர் ராஜேஷ் தலைமையில் கரூர் மாவட்ட காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், சேவாதளம் சார்பில் மனோகரா கார்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் காங்கிரஸார் அப்பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் நகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன்பாபு, சுரேகா பாலச்சந்தர், இளைஞர் காங்கிரஸ் யுவராஜா, சந்திரசேகர், முருகேசன், பழனியப்பன், மணி, வீரமலை, வாசன் பாசறை நிர்வாகி செல்வராஜ், செல்வதுரை, அழகேசன், சீனிவாசன், நீலமேகம், ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications