உலகின் மாபெரும் தங்க உற்பத்தி நிறுவனத்தின் தலைவரான சீனிவாசன் வெங்கட கிருஷ்ணன்

உலகின் மிகப்பெரிய மதுபான கம்பெனியான தியாஜியோ கம்பெனியின் தலைவராக இந்தியாவில் பிறந்த இவான் மெனசெஸ் என்பவர் அறிவிக்கப்பட்ட, அடுத்த நாளே சீனிவாசன் வெங்கட கிருஷ்ணன் பெரிய தங்கங்கம்பெனியின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளது இந்தியர்களை பெருமைப்பட வைத்திருக்கிறது.
உலகின் மூன்றாவது பெரிய தங்க கம்பெனியாக ஆங்கிலோ கோல்டு ஆஷாந்தி என்ற தங்க சுரங்க நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது உலகில் 20 இடங்களில் தங்கத்தை வெட்டி எடுக்கும் கம்பெனியாகும். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 3.944 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை உற்பத்தி செய்து 6.35 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
கானா நாட்டில் செயல்பட்டு வந்த ஆஷாந்தி கோல்டு பீல்டு கடந்த 2004-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஆங்கிலோ கோல்டு லிமிடெட் கம்பெனியுடன் இணைந்து ஆங்க்லோ கோல்டு ஆஷாந்தி நிறுவனமாக மாறியது.
அதுவரை, தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்ட வெங்கட், பின்னர் 2005-ம் ஆண்டு ஆங்கிலோ கோல்டு ஆஷாந்தி நிறுவனத்தின் போர்டு உறுப்பினராக பதவி ஏற்றார். தற்போது, ஆங்கிலோ கோல்டு ஆஷாந்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications