ரூ.200 பென்ஷன் பெற நாள் முழுவதும் வெயிலில் கால் கடுக்க காத்திருந்த மூதாட்டி மரணம்

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வட்டாரபஸ்தியைச் சேர்ந்தவர் லக்ஷ்மம்மா(60). முதியோருக்கான ஓய்வூதியம் பெறுபவர். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்த தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி அதை அவர்கள் எடுக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வட்டாரபஸ்தி பகுதி முதியோருக்கு மே 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அம்பர்பேட் தாலுகாவில் உள்ள ஒரு மையத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து லக்ஷ்மம்மா ஸ்மார்ட் கார்டு வாங்க அம்பர்பேட் மையம் சென்றார். அங்கு அவர் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை தண்ணீர், உணவின்றி கொளுத்தும் வெயிலில் காத்திருந்தார். ரூ.200 ஓய்வூதயத்திற்கான ஸ்மார்ட் கார்டை பெற மணிக்கணக்கில் வெயிலில் நின்றார். மதிய வேளையில் அவர் திடீர் என்று மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications