ஆளுநருடன் அன்புமணி சந்திப்பு- இந்தியாவிலேயே எங்கள் மீது இப்படி வழக்குகள் என புகார்!!

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 3 வழக்குகளில் அன்புமனி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து விடுதலையானார். ஜாமீன் கொடுக்கப்பட்ட போது விதிக்கபட்ட நிபந்தனையின் அடிப்படையில் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் இன்று காலை அவர் கையெழுத்துப் போட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ம.க.வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்படுகிறது. எங்கள் கட்சி நிர்வாகிகள் குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
பின்னர் ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் ரோசய்யாவை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றையும் அன்புமணி கொடுத்தார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, இந்தியாவிலேயே வேறு எந்த கட்சி மீதும் இப்படி பொய் வழக்குகள் போட்டதில்லை. இப்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது கிடையாது. இது கண்டிக்கத்தக்கது. இதுபற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் முறையிடப் போகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications