சென்னைக்கு 600 கி.மீ கிழக்கே மகாசேன் புயல்.. மழை பெய்யலாம்
சென்னை: சென்னைக்கு கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் மகாசேன் புயல் நில கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி மகாசேன் புயல் மத்திய மேற்கு வங்க கடலில் சென்னைக்கு கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வங்க தேசம், மியான்மர் அருகே 17-ந் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக போச்சம்பள்ளி, கரூர், ராசிபுரம், பாப்பிரெட்டி பட்டி ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழையும், விருத்தாசலம், திருப்பத்தூர், சேந்தமங்கலம், குளித்ததுரை, பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் 1 செ.மீ மழையும் பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் நகரில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மகாசேன் புயல் கரையை கடந்த பிறகு வெப்ப சலனம் காரணமாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications