சாப்பாட்டுச் சண்டை.. மதுரை சிறையில் பயங்கர மோதல்: கைதியின் கால்கள் உடைந்தன
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகளிடையே சாப்பாடு தொடர்பாக பெரும் சண்டை மூண்டது. இதில் ஒரு கைதியின் கால் உடைந்து போனது. அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே இன்று சாப்பாடு தொடர்பாக திடீரென மோதல் மூண்டது. பிரிவு பிரிவாக பிரிந்து கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் பாண்டிராஜ் என்ற கைதியின் கால் முறிந்து போனது. உடனடியாக அவரை போலீஸார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications